கடன் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் – ஜப்பான்!

இலங்கையின் கடன் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் என ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானிய நிதி அமைச்சர் Shunichi Suzuki குறித்த விடயத்தை தெரிவித்தள்ளார்.

குறித்த விடயத்தில் ஜப்பான் ஏனைய கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு, தமது பெரிய கடன் வழங்குநர் நாடுகளை ஒன்றிணைக்குமாறு ஜப்பானை இலங்கை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு தமது நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வில்லை என குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் இலங்கை தரப்புடன் பல்வேறு தொடர்புகளை மேற்கொண்டு வருகிறோம்,  ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்த ஏற்பாடும் நடக்கவில்லை” என ஹயாஷி இன்றைய தினத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *