காணமால் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் மௌனமாக இருப்பது ஏன்? யாழ். பல்கலைக்கழகம் கேள்வி

காணமால் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் மௌனமாக இருக்க கூடாது என யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சர்வஎனச காணமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கயில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினமான இன்று மக்களின் உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் சர்வஎனசம் மௌனமாக உள்ளது.

ஆகவே எமது மக்களுக்கான பதில்களை சர்வேதேசம் விரைவாக கூறவேண்டும். ஐ.நா இதற்கான பதிலை தர வேண்டும்.

இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *