நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் – சனத் நிஷாந்தவிற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி விஜித் குமாரவினால்  இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளாக நாடாமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *