இம்முறையாவது தமிழ் மக்களின் கதறல்கள் சர்வதேசத்துக்கு கேட்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.
சர்வேதச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உலகம் முழுவதும் உள்ள மனித நேயமிக்கவர்களால், இன்றைய தினத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009 க்கு பின்னர் போர் முடிவுற்ற பின்னர் கையளித்த தமது உறவுகளைத் தேடி பலர் இங்கே வீதி வீதியாக போராடி வருகின்றனர்.
இன்றுவரை அவர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. அவர்களின் கதறல்கள் இம்முறையாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு கேட்குமா, கதவு திறக்குமா என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நாம் முன்வைக்கின்றோம்.- என்றார்.
பிற செய்திகள்