தேசிய சபையை அமைப்பதற்கான யோசனை பிரதமரால் முன்வைப்பு

கொழும்பு, ஓக 30

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய சபையொன்றை அமைப்பதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வரைபை கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கான கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீன அணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி, தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *