
கொழும்பு, ஓக 30
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய சபையொன்றை அமைப்பதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வரைபை கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கான கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீன அணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி, தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.