கம்பளை, ஓக 30
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற 30 பெண்கள் துபாயின் அஜ்மல்வாலாவில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு தொழிலாளர் அமைச்சு மற்றும் சுவிஸ் அபிவிருத்தி முகவர் ஆகியவற்றின் பங்காளித் திட்டமான பாதுகாப்பாக தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கான சமூக அடிப்படையிலான திட்டத்தின் செய்தியாளர் மாநாடு கம்பளையில் நடைபெற்றது,
அங்கு இந்த திட்டத்தின் முகாமையாளர் சரத். தூல்வல இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக அழைக்கப்படும் பெண்களை பல்வேறு இடங்களில் தடுத்து வைப்பதாகவும், அவர்களுக்கு முறையான உணவு கூட வழங்கப்படுவதில்லை என்றும், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை குறித்த ஒரு குழுவினர் எடுத்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
