கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக,அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மறுநாள் 4ஆம் திகதி அதிகாலை 2 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்த, முல்லேரியா, இரத்மலான, கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *