18 மணிநேர நீர் விநியோகத்தடை அமல்

கொழும்பு,ஓக 30

கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  3 ஆம் திகதி 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது என நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மற்றும் மஹரகம மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு  நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *