யாழ்ப்பாணத்தில் திடீரென பெய்த மழை காரணமாக பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் அப்பகுதி இருந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வியாபாரிகள் இதன்போது யாழ். மாநகரசபையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கால்வாய்களுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் தேங்கியுள்ள நிலையில், மழைநீர் செல்வதற்கான வழியின்றியே இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
