மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(புதன்கிழமை) 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் ஆறுகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் அளுத்கங்க கோரள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம ஆகிய பகுதிகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *