நாட்டில் தொடரும் சித்திரவதை – எப்படி ஜெனிவாவில் அரசு சார்பில் கதைப்பது- சபையில் கேள்வியெழுப்பிய சஜித்!

இன்றைய சபை நாடாளுமன்ற சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்:

உரிமைக்காக போராடிய பல்கலைக் கழக மாணவர்கள் 25 பேரை நேற்று கைது செய்துள்ளீர்கள்.

அவர்கள் தமது அரசியல் உரிமைக்காக போராடினார்கள்.
பொதுச் சொத்துக்களை சேதமாக்கவில்லை.

ஏன் அவர்களை கைது செய்தீர்கள்.எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தீர்கள்.இதற்கான பதிலைத் தாருங்கள்.ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வில்,எமது நாடு தொடர்பில் எவ்வாறு கதைப்பது.நாம் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம்,ஆனால் இங்கே நடக்கும் சித்திரவதைகளை பார்த்தால் எவ்வாறு அங்கே நாம் கதைப்பது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *