ஹெரோயினுடன் ‘குடு பட்டி’ உட்பட இருவர் கைது!

‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நடுன் சிந்தக விக்கிரமரத்னவின் போதைப்பொருள் கும்பலின் முக்கிய உறுப்பினரான ‘குடு பட்டி’ அல்லது ‘குடு ரெஜினா’ உட்பட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.

51 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த போதே ராஜகிரிய கோட்டே வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 40 வயதுடைய ராஜகிரிய மற்றும் தங்காலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *