வவுனியாவில் இவ்வருடம் 4 காட்டு யானைகள் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மாத்திரம் நான்கு காட்டு யானைகள் உயிரிழந்ததாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன.

தற்போது வவுனியா மாவட்டத்தில் காடு அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையால், காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதோடு, மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த பகுதியிலுள்ள மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வருடம் 8 மாதங்களில் 4 யானைகள் மாத்திரம் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த வருடத்தில் 10 யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *