
இலங்கை மக்களுக்கு புதிய அனுபவத்தை சேர்க்கும் வகையில் தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட தாமரை கோபுரம் தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாகும்.
இதன்படி, செயற்பாடுகள் ஆரம்பமானதுடன், “கொழும்பு நெலும் குளுன தனியார் நிறுவனம்” மக்களுக்கு பல புதிய அனுபவங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகின் பணக்கார நாடுகளைப் போன்று பொழுதுபோக்கு மற்றும் புதிய தொழில்நுட்ப அனுபவங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு நெலும் குளுன பிரைவேட் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
டிக்கெட் விலை
உள்ளூர் மக்களின் சாதாரண பாஸ்: ரூ 500
உள்ளூர் வரம்பற்ற பாஸ்: ரூ 200
வெளிநாட்டினர்: அமெரிக்க டாலர் 20
பிற செய்திகள்