வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்த நிலையான அரசாங்கம் அவசியம்- ஹரிணி!

நிலையான அரசாங்கம் இல்லாமல் எப்படி வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் என நேற்று தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்கு நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும் என நம்பும் அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடியாது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் தற்போது மாற்றியமைப்பதாக குற்றம் சுமத்திய எம்.பி., நிலையான அரசாங்கம் இல்லாத காரணத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக வலியுறுத்தினார்.

கல்விக்கு அதிக இடம் கொடுப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென்றாலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு முன் இந்நாட்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *