நேற்று கைதானோரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்படுவரா?

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று கேள்வி எழுப்பினார்.

இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 25 பேரும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்களா? என்று அவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள், நாட்டுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக போராட்டக்காரர்கள் காவல்துறையிடம் முன்கூட்டியே அறிவித்திருந்தபோதும், அதற்கு மேல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நேற்று கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *