விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகத் தான் இருக்க வேண்டும் – கடும் சீற்றத்தில் பொன்சேகா!

விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு முற்படும் விக்னேஸ்வரன் பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு வயதுபோய் விட்டது. முன்னர் நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன். அப்படியிருந்தும் எதற்காக அவர் இப்படிக் கதைக்கின்றார். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *