யாழ் மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலும் சிறந்த உத்தியோகத்தர் தெரிவும்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு இன்று இடம்பெற்றது,.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று 11.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.

கொவிட்-19 மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு, கொவிட் -19 விடுமுறையை சுற்றிக்கைக்கு அமைய நடைமுறைப்படுத்தல், மரநடுகைத்திட்டம், ஆளணியை சீர்ப்படுத்தல், அலுவலக வளங்களை சிக்கனமாக பயன்படுத்தல், அரச நிறுவனங்களுக்கு கிடைக்கும் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புக்களுக்கு சுற்றிக்கைக்கு அமைய உடனடியாக பதிலளித்தல், 60 வயதிற்கு உட்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வு வழங்கல்,செலவீனங்களை கட்டுப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை குழுக்களை நியமித்தல், நலநோன்புத் திட்டங்கள் போன்ற விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மாதாந்த சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ்கள்

திரு.வி.அருந்தவகுமார் – மார்ச்
திருமதி.கே.குணதர்சனா – ஏப்ரல்
திருமதி.எஸ்.நிர்மலா – மே
திருமதி.எஸ்.தயானி – யூன் ஆகியோருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் கிளைத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *