புத்தளம் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் இலை கொட்டி நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் இருந்து அதிகளவு தேங்காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலவாணி நாட்டுக்கு கிடைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல ஏக்கரிலுள்ள தென்னை மரங்கள் இலை கொட்டி நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் பொருளாதார நெருக்கடியுடன் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களினால் தாம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், தென்னை மரங்களுக்கு இவ்வாறு நோய் ஏற்பட்டமை தமக்கு மேலும் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெங்கு பயிர் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு தென்னை மரங்கள் இலை கொட்டி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் தெனனையில் இருந்து எதிர்பார்த்த விலைச்சலைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெங்கு செயகையாளர்கள் கவலை குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், தென்னை இலைகளின் பச்சையம் இல்லாமல் நாளுக்கு நாள் தென்னை மரங்கள் பழுதடைந்து வருவதாகவும் தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னர் ஒரு ஏக்கரில் 2500 தேங்காய்களை பறித்த தாங்கள் தற்போது ஐநூறு தேங்காய்களை கூட பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இலை கொட்டி நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



பிற செய்திகள்