மூதூரில் நடமாடும் சேவையூடாக மண்ணெண்ணெய் விநியோகம்!

பிரதேச செயலக எரிபொருள் குழுவின் மேற்பார்வையில் நேற்றும் இன்றும் (30,31) மூதூரின் கிராமப்பகுதிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நடமாடும் சேவை ஊடாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

பல நோக்கு, கூட்டுறவு சங்கத்தின் ஊடாக இது இடம் பெற்றது.

மேலும், இதன்போது 58, ஆசாத் நகர், ஜின்னா நகர், நாராயணபுரம், முன்னம்பொடிவெட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்யயப்பட்டது.

இதன்போது, குறித்த பகுதியை சார்ந்த, தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் குறித்த நடமாடும் சேவை தொடர்பிலான தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *