புத்தளத்தில் கட்டாக்காளி மாடுகள் வீதிகளில் அதிகளவிலாக சஞ்சரிப்பதாக வாகன சாரதிகள் விசனம்!

புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேச சபை வண்ணாத்திவில்லு பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகிய பகுதிகளில் கட்டாக்காளிமாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினாால் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும்,புத்தளம் கொழும்பு பிரதான வீதி, பாலாவி கற்பிட்டி பிரதான வீதி, புத்தளம் குருநாகல் பிரதான வீதி, புத்தளம் அனுராதபுர பிரதான வீதி, புத்தளம் எலுவாங்குளம் பிரதான வீதிகளில் கட்டாக்காளி மாடுகள் சஞ்சரிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு, கட்டாக்களி மாடுகள் இரவு பகலாக வீதிகளில் சஞ்சரிப்பதினால் வாகங்களை செலுத்துவதற்கு சிரமங்களுக்கு உள்ளாகிவருவதாக வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும்,பல விபத்துக்கள் இடம்பெறுவதுடன் பல உயிரிழப்புகளும் இடம்பெறுவதாக இதன்போது தெரிவிக்கின்றனர்.

இதனை, கவனத்தில், கொண்டு வீதி விபத்துக்களை தடுக்குமாறு வாகன சாரதிகள் மற்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *