2 ஆவது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரழந்துள்ளார்.

ஐந்து வாரங்களுக்குள் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஐந்தாவது துப்பாக்கிச் சூடு இதுவெனவும், அந்த ஐந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இருவர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக, இன்று (31) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தோர், கட்டான தெமன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 51 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *