கிளிநொச்சியில் நெல் உலர விடும் தளத்திற்கான வேலைகள் இன்று ஆரம்பம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் கிராமத்தில் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நெல் உலர விடும் தளத்திற்கான வேலைகள் இன்று (31-08-2022) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,றகமா நிறுவனத்தினால் இன்று பகல் 11.30 மணியளவில் கிருஸ்ணபுரம் பழைய பொதுநோக்கு மண்டபத்தில் விவசாயிகளிற்கான நெல் உலரவைக்கும் தளம் அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டல், நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி, செயற்திட்டம், கிருஸ்ணபுரம் விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில் அவர்கள் தமது நெல்லை உலர வைத்து அதற்கான பெறுமதியை மதிப்பேற்றம் செய்வதுடன் குறித்த சங்கங்களிற்கு ஒரு வருமான அதிகரிப்பு செயற்திட்டத்தினை உருவாக்கும் வகையில் 30,50 அளவில் நொல் உலரவைக்கும் தளம் ஒன்றினை அமைப்பதற்கு றகமா நிறுவன நிதி அனுசரணையுடன் வடமாகண விவசாய அபிவிருத்தி ஆணையாளர்அலுவலகத்துடன் கிளிநொச்சி கமநல சேவை நிலையம் மற்றும் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டமாகும்.

இது, குறித்த பிரதேசத்தில், நெல் உற்பத்தியாளர்களை மகிழ்வடைய வைப்பதுடன் வீதி போக்குவரத்துக்களிற்கு தடங்கல்கள் ஏற்படாமல் பதுகாக்கவும் உறுதுணையாக உள்ளது.

இதன் பயனாளிகள் குறைந்த பட்சம் ஆண்டு ஒன்றிற்கு 90 விவசாயிகள் பலன் அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *