தற்போது, நாட்டில் நிலவிவருகின்ற மின் துண்டிப்பு காரணமாக, உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனால் அம்மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படக்கூடாதென்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் அம்மாணவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் பெறுமதியான LED INTELLIGENT மின் குமிழ்களை வழங்கி வைத்தார்.
குறிப்பாக,குச்சவெளி பிரதேச சபை குட்பட்ட பகுதியில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் மின்துண்டிப்பு நேரங்களில் தங்களின் கல்வி கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதற்கட்ட நடவடிக்கையாக புல்மோட்டை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு இந்த LED INTELLIGENT மின் குமிழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், கல்லூரியின் முதல்வர் ஜெ.எம்.இக்பால் தலைமையில் இன்று (31) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.நப்ஸார் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை, புல்மோட்டை அறபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கும் இத்தகைய மின்குமிழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அதிபர் ஏ.அப்துல் காதர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதியே இந்த LED INTELLIGENT மின் குமிழ்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்