
பிங்கிரிய ஹிருவல்பொல – ஹிரிவெவ பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,ஹிரிவெவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது, அதிக விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் தனது வீட்டு உணவுத் தேவைக்காக அருகில் உள்ள குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற போதே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபரின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டதுடன், அங்கு மரண விசாரணைகளும் நடைபெற்றது.
பிங்கிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்