ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மாற்று வழி என்ன என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் கட்சியை விட்டு வெளியேறி சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்திருந்தனர்.
இவ்வாறு வெளியேறிவர்களில் இரண்டு பேர் தேசியப் பட்டியலின் ஊடாக தெரிவானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்கு மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஊடாகவே ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சரித ஹேரத் ஆகியோர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறிய ஏனையவர்களில் அதிகமானவர்களின் நாடாளுமன்ற வயது இரண்டு ஆண்டுகளும் சில நாட்களுமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளியேறி சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த நாடாளுமுன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார்.
நாடு நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் தற்பொழுது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் அனைவரையும் இணைந்து செயற்படுமாறு தொடர்ச்சியாக கோரி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்