யாழ் – கொழும்பு தனியார் சொகுசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் சந்திப்பகுதியில் தனியார் சொகுசு பேருந்து மீது இனம்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதலில் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்து சேதமாகியுள்ள சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது .

இத்தாக்குதலினால் பயணிகள் எவருக்கும் காயமேற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ஏ 9 வீதி ஊடாக பயணித்த தனியார் சொகுசு பேருந்து மீதே இரவு 9.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார் . இதன் பிரகாரம் கல்வீச்சு தாக்குதல் குறித்தான விசா ரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *