சீன முதலீடுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்- சபையில் சஜித் அணி விடாப்பிடி!

கடனை செலுத்த முடியாத பட்சத்தில் சீன முதலீட்டில் இலங்கையின் வளங்களை இலவசமாக தள்ளுபடி செய்யுமாறு சீனா கூறியதாக வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, தாமரை கோபுரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற திட்டங்களை சீனாவுக்கு வழங்க வேண்டுமா என லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

யார் ஆட்சி செய்தாலும் இலங்கை அனைவரின் நாடு எனவும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் தெரிவித்தார்.

இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக டொலர் பற்றாக்குறையே காணப்படுவதாகவும், ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் ஒரு முன்மொழிவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *