நாய் குட்டிகளை நிர்க்கதியாக விட்டுச் சென்ற நபர்களுக்கு ஏற்பட்ட நிலை கைது

லொறியொன்றிலிருந்து நாய்களை நிர்க்கதியாக வீதியில் இறக்கி விட்டுச்சென்ற இரு நபர்களை பிடித்து பண்டாரகம மஸ்வில பொலிசாரிடம் பிரதேசவாசிகள் ஒப்படைத்துள்ளனர் .

பண்டாரகம, கோரக்காஸ் சந்தி பகுதியில் சந்தேகநபர்கள் சிறிய லொறியை நிறுத்திவிட்டு அதிலிருந்து ஒரு நாயை வீதியில் விட்டு விட்டு செல்லும்போது, அதை மோட்டார்சைக்கிளில் வந்த நபர் அவதானித்து லொறியை பின்தொடர்ந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தத்துடன், மக்கள் லொறியையும் நிறுத்தத் செய்துள்ளார்.

பிரதேச மக்கள் ஒன்று திரண்டு லொறியை திறந்து பார்த்தபோது, ​​15 நாய்கள் உள்ளே இருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் அவற்றுள் சில நாட்களுக்கு முன்பு பிறந்த 5 நாய்குட்டிகள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பரகஸ்தோட்டையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து நாய்கள் கொண்டு வரப்பட்டதாகவும், உயர் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அவற்றை வீதியில் விட்டுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவ் இருவரையும் மஸ்வில பிரதேச பொலிஸாரிடம் பிரதேச வாசிகள் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அஹலியகொட மற்றும் பாணந்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *