மரணத்திலும் பிரியாத பாச தம்பதிகளின் மனதை உருக்கும் போராட்டம்!

திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் , மரணத்திலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி – குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஆர்.ஏ.எஸ். ரணசிங்க (வயது – 88), அவரது மனைவியான ஏ.ஜி. பண்டாரநாயக்க ( வயது – 81) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ரணசிங்க கடந்த 30ம் திகதி காலையில் உயிரிழந்துள்ளார். கணவரின் பிரிவால் கவலையுற்றிருந்த மனைவியின் உயிரும் ஒரிரு மணிநேரத்துக்கு பின்னர் பிரிந்துள்ளது.

இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *