
கிளிநொச்சி நகரசபையின் எல்லைகளை மீள்பரிசீலனை செய்ய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று சமத்துவக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார் .
இதுதொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு சமத்துவக் கட்சியின் செயலாளரால் நேற்றுமுன்தினம் அனுப்பப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது .
கடிதத்தில் மேலும் உள்ளதாவது ,
மக்கள் தொகை செறிவாகவும் . நகர கட்டமைப்பொன்றுக்குத் தேவையான அனைத்து அம்சங்களை தன்னகத்தே வைத்திருந்தும் நீண்டகாலமாக பிரதேசசபை என்ற தகுதி நிலையில் நிர்வகிக்கப்படும் கிளிநொச்சி நகரை , நகரசபை என்ற படிநிலைக்கு தரம் உயர்த் துவதற்குரிய முன்மொழிவுகள் தங்களது அரசால் வெளியி டப்பட்டிருப்பதை கிளிநொச்சி நகர மக்களின் சார்பில் பேரு வகையுடன் வரவேற்கிறோம் .
பிரதேசசபையை தரமுயர்த்தும் செயற்பாடு , நீடித்ததும் நிலை யானதுமான அபிவிருத்தியை நோக்கி கிளிநொச்சி நகரை முன்னகர்த்தும் என்ற திடமான நம்பிக்கை எமக்கு இருக்கிறது .
எனினும் , உள்ளூராட்சி அமைப் பொன்றைத் தரமுயர்த்துவது தொடர்பாக கருத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் அனைத்தும் கிளிநொச்சியை நகரசபையாக்கும் விடயத்தில் எச்சரிக்கையோடு தவிர்க்கப்பட்டிருப்பதோடு , ஒருசில தனிநபர்களின் அரசியல் அபிலாஷைகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருப்பதும் வேதனையான விடயமாகும் .
எனவே , குறுகிய அரசியல் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி , மக்கள் மத்தியில் நிரந்தரமான பிரிவை உருவாக்கக்கூடிய . எவருடனும் கலந்தாலோசிக்கப்படாத நகர சபை உருவாக்கும் முயற்சியை மறுபரிசீலனை செய்து .
சரியானதும் பொருத்தமானதுமான பொறிமுறையொன்றின் கீழ் கிளிநொச்சியை நகர சபையாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் வேண்டி நிற்கிறோம் என்றுள்ளது .
பிற செய்திகள்