
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக புத்தளம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழைப் பெய்து வருகிறது.
இந்த நிலையில் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் 12 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் நீர்த்தேக்கத்தை அன்டிய தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்களை மிக அவதானமாக செயல்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.