உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

<!–

உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! – Athavan News

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில் முப்பத்திரண்டாவது நாளான இன்று வவுனியா பத்தினியார் மகிழங்குளம் முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *