4 ஆம் திகதி புதிய கூட்டணி-விமல் அழைப்பு!

சர்வதேச நாணய நிதியம் என்ற கோவிலில் காணிக்கை கட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாமும் தீர்வை தேட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அதாவது, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர், இவ்வாறு கூறினார்.

நாம் தொடர்ச்சியாக பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. தீர்வு திட்டத்தை முன்வைக்கும் வகையிலேயே புதிய கூட்டணியை உருவாக்கின்றோம். அதன் அங்குராப்பண நிகழ்வு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் இணையுமாறு அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியம் ஒரு தொகை கடனை வழங்குவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா, அவ்வாறு தீர்ந்துவிடும் என நினைப்பவர்களும் உள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. நாமாக எழுந்து நிற்கும் தீர்வை தேட வேண்டும்.” – என்றார் விமல்.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அணியுடனும் பேச்சு நடத்தப்படும். அத்துடன், தேசியவாத சக்திகள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் உட்பட கொள்கையை ஏற்கக்கூடிய அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைக்கின்றோம்.” எனவும் விமல் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *