இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டொமோயா ஒபோகாடா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கையில் நவீன அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுவதற்கான விதிமுறை கட்டமைப்பு மற்றும் தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்பு என்பன தொடர்பில் அவர் ஆராய்ந்திருந்தார்.
அத்துடன் ஆடைத் தொழிற்துறை, தேயிலை தோட்டங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை தொடர்பில் அவர் ஆராய்ந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அவர் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் முன்வைக்கவுள்ளார்.
இலங்கையில் நவீன அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் நீடித்து வரும் குறைபாடுகளை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், சிறுவர் தொழிலாளர்களை தடுப்பதிலும், நிவர்த்தி செய்வதிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் மற்றும் பிற அமைப்பினர்களுக்கு உதவுவதற்கான பரிந்துரைகளையும் நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் தமது அறிக்கையில் முன்வைத்துள்ளார்.
பிற செய்திகள்