
இலங்கைக்கான எகிப்து தூதுவர் மகேத் மொஸ்லே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை வெளிவிவகார அமைச்சில் நேற்று சந்தித்துள்ளார்.
இந்நிலையில்,வெளிவிவகார அமைச்சர் சப்ரி மற்றும் தூதர் மோஸ்லே ஆகியோர் பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
தற்போதைய, முன்னேற்றங்கள், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்த சவால்களை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவர் மொஸ்லேவிடம் அமைச்சர் சப்ரி விளக்கினார்.
உலக முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இதன் போது லந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும், எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65 ஆவது ஆண்டு நிறைவு விழா அடுத்த வருடம் சிறப்பாக கொண்டாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்