சிகை அலங்கரிப்பு நிலைத்தில் போதை மருந்து விற்பனை!

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள சிகைஅலங்கரிப்பு நிலைத்தின் மறைவில் போதை மருந்து தொழிலில் ஈடுபட்ட இரு சகோதரிகளுக்கு நிதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, அவர்களை 300,000 பவுண்டுகள் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் 44 வயதான ஷாஜியா தின் மற்றும் அவரது மூத்த சகோதரி 47 வயதான அபியா தின் ஆகிய இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு குழுவை முன்னெடுத்து நடத்தி வந்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் சிகைஅலங்கரிப்பு நிலைத்தை நடத்தி வந்துள்ளதால், அவர்களின் போதை மருந்து தொழில் தொடர்பில் சந்தேகம் எழவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 2020 டிசம்பர் மாதம் இந்த இரு சகோதரிகள் தொடர்பில் மொத்தம் 17 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும்,சகோதரிகள் இருவருக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை மேற்கொண்ட கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார், மொத்தம் 60 கிலோ ஹெராயின் மற்றும் கோகோயின் போதை மருந்தும் 300,000 பவுண்டுகள் தொகையும் மீட்டுள்ளனர்.

இந்த இரு சகோதரிகளும் கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயர் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.

இந்த, வழக்கில் ஷாஜியா தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபண்மான நிலையில், அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது சகோதரிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரு சகோதரிகளும் தொடர்புடைய 17 பேர்கள் கொண்ட குழுவினரிடம் இருந்து மொத்தமாக 736,464.30 பவுண்டுகள் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *