நாட்டு மக்களை பட்டினியில் வைத்திருக்கும் யோசனை ரணிலின் பாதீட்டில்!

பேசும் விடயங்களில் உண்மையிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தினூடாக 61,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் உலக உணவுத்திட்டம் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 61,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதே போன்று பிரதமராக இருந்தபோது காலிமுகத்திடல் போராட்டம் தொடர வேண்டும் என்று அதற்கு தாம் ஆதரவு என்று தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்கியதாக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *