பாராளுமன்றில் வெளியிடப்பட்ட விசேட நினைவு அஞ்சல் அட்டை! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் முதல் தபால் அட்டை வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட நினைவு அஞ்சல் அட்டை இன்று (1) பாராளுமன்ற வளாகத்தில் வெளியிடப்பட்டது.

அங்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த நினைவு அஞ்சல் அட்டை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வழங்கப்பட்டது.

இவற்றில் 1000 விசேட நினைவு அஞ்சல் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றை 300 ரூபா விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ஆச்சார்ய பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் முதல் அஞ்சல் அட்டை செப்டம்பர் 1, 1872 அன்று விக்டோரியா மகாராணியின் உருவப்படத்துடன் கூடிய இரண்டு சென்ட் முத்திரை வெளியிடப்பட்டது.

இந்த நாட்டின் முதல் அஞ்சல் அட்டையின் புகைப்படத்துடன் இந்த சிறப்பு நினைவு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான முதித பிரசாந்தி சொய்சா, கலாநிதி கயாஷான் நாவானந்தா, யாதாமினி குணவர்தன, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, தபால் மா அதிபர் ரஞ்சித் அரிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தபால் திணைக்களத்தின் உயரதிகாரிகள் மற்றும் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *