ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்பாடே எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது அதே நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடக்கி விடுதல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துதலுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *