மானிப்பாய் மகளிர் கல்லூரியில் திறன் வகுப்பறையில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் இராமலிங்கம் பவுண்டேசன் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல்  செயற்பாடுகள் கடந்த 31ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரியின் அதிபர் சுனித்ரா சூரியராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் ஆரம்ப கல்வி உதவிக்கல்விப்பணிபாபாளர் முரளிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக இரட்ணம் பவுண்டேசன் சார்பில் ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் சு. கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து  கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *