<!–
நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் எஞ்சிய 30 சதவீத திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான விசாரணை அறிக்கைகளை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, மக்கள் முன் உண்மையை எடுத்துரைப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.