புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்!

புத்தளம் மாதம்பை – விலத்தவ பிரதான வீதியின் வெல்லராவ பகுதியில் இன்று பிற்பகல் மரமொன்றின் கிளை முறிந்து மின்சாரக் கம்பமொன்றையும் உடைத்த நிலையில்  வீதியில் வீழ்ந்துள்ளதாக மாதம்பைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், மாதம்பை –  விலத்தவ பிரதான வீதியின் போக்குவரத்து சிலமணி நேரம் ஸ்தம்பிதமடைந்ததுதடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தமையினால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுத்தல்களை வழங்கினர்.
பின்னர் குறித்த பகுதிக்கு மாதம்பை மின்சாரசபை ஊழியர்கள் சென்று மின்சாரத்தை துண்டித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதி அதிகாரசபையினர் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இனைந்து வீதியில் முறிந்து வீழ்ந்த மரக்கிளையை அப்புரப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *