விமலின் வீட்டிற்கு தீ: 03 பேர் கைது!

மே 09 ஆம் திகதி பொது அமைதியின்மையின் போது ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் இல்லத்தை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சந்தேக நபர்கள் சொத்துக்களை அழித்துள்ளதுடன் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று ஹோகந்தர பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 18, 36 மற்றும் 38 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *