சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவு-பிரித்தானிய பிரதமர் உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அதேவேளை சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றும் பிரித்தானியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவை அரச தலைவராக நியமித்தமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதும், ஜனநாயக இணக்கப்பாட்டைப் பெறுவதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *