
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக தனது 49ஆவது வயதில் இன்று காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார்.
தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் ‘சிம்டாங்காரன்…’ எந்திரன் 2.0 படத்தில் ‘புள்ளினங்காள்..’ பிகில் படத்தில் ‘காலமே காலமே’’ பல பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்துள்ளார் பம்பா.
பாகுபலி படத்தில் இவர் பாடிய ‘வந்தாய் ஐய்யா வந்தாய் ஐய்யா’’ பாடல் பிரபலமானது.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.
இவரது மறைவுக்கு திரையுலவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.