மோட்டார் சைக்கிள் கெப் வண்டியுடன் மோதி விபத்து! இருவர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயங்களுக்குள்ளா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கெப் வண்டியுடனே பாலாவியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸொன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருனாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த கெப்வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகள முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *