சீன உர இறக்குமதி மூலம் 69 லட்சம் டொலர் இழப்பு!

சீனாவிலிருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டுக்கு 69 இலட்சம் டொலரை இழந்தமைக்கு முன்னாள் அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என பாராளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், ஆனால் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அச்சம் காரணமாக அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறி னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *