மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மூதூர் பிரதான வீதியிலுள்ள சிபட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏக்கருக்கு 10 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை காலை அவர்கள் வருகைதந்த போதும் டீசல் வழங்கப்படவில்லை.இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதன்போது விவசாயிகள் சிறிய முரண்பாட்டில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.
விவசாயிகள் கருத்து தெரிவிக்கும்போது.
இன்று டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே நாம் வருகைதந்தோம். ஆனால் டீசல் இன்று தரமாட்டோம் என்கிறார்கள்.
காட்டுப்பகுதியூடாக யானை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது.
வந்து போவதற்கு மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் அடிக்க வேண்டும்.அதனையும் QR முறையில்தான் தருகின்றார்கள்.மீண்டும் டீசல் எடுக்க வருவதற்கு மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் அடிக்க வேண்டுமென கவலை தெரிவித்தனர்.
இது வேளாண்மை அருவடை நேரம் வெட்டு மெசின்காரன் டீசல் தந்தால்தான் வயலுக்குள் இறங்குவேன் என்கிறான். அறுவடைடை செய்ய டீசலுக்கு நாங்கள் என்ன செய்வோம் எனவும் கேள்வி எழுப்பினர்.
இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய முறையில் டீசலை விநியோகிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிற செய்திகள்