யாழில் அனைத்து பேக்கரிளும் மூடப்படும் அபாயம்!

தற்போது இலங்கையில் கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கறுப்பு சந்தையில் ஒரு கிலோ கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் கொழும்பில் உள்ள 2000 ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பேக்கரி கடைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் காலை உணவாக பான் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

ஒரு பாக்கெட் பாக்கெட் ரூ.250க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கை சந்தையில் பான் ஒன்றின் (ரொட்டி) விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

50 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூடை கோதுமை மாவின் விலை தற்போது 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *